காலம் காலமாக... நம் வீட்டில்...
நம் அம்மா செய்யும் அதே உணவுகள்...

அதே சுவையுடன்! அதே தரத்துடன்!!
அதே "கை" பக்குவத்துடன்!!!
"வயிறு ஆற" சாப்பிடும் உணவகம்.

அளவான "காரம்" அளவான "எண்ணெய்"

குழந்தைகளுக்கும், கருவுற்ற தாய்மார்களுக்கும்
தைரியமாய், தாராளமாய் வாங்கிக்கொடுக்கலாம்!!
குடும்பத்தோடு வந்து சாப்பிட "தகுதி" உள்ள இடம்.

நம் கொங்குநாட்டின்
"மண்" சார்ந்த, "மரபு" சார்ந்த உணவுகள்!

ஒவ்வொரு வாய் உணவை மெல்லும் போதும்...
கடித்துச்சுவைக்கும் போதும்... பரவசம் !!

Our Story


“Quality is never an accident. It is always the result of intelligent effor"

We buy chicken from trusted suppliers like Suguna, Venkys India ltd., who meet international safety norms.

Food at CurryFactory is always tasty and good because ourchefs cook it fresh several times a day. So what you bite into is nothing but the best.

To consistently improve ourselves and our standards, we put our heart into what we do. So we can improve the customers experience at CurryFactory.

உயர்தரமான கடைச்சரக்குகள் மற்றும் இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ரெடிமேட் மசாலாக்கள், அஜினமோட்டோ, சமையல் சோடாப்பு, சாயப்பொடி போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த ஒரு கெமிக்கல் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை.

சமைப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.மரச்செக்கில் ஆட்டிய புதிய எண்ணெயில் தரமான நாட்டுச் சின்ன வெங்காயம், வரமிளகாய், நாட்டுப்பூண்டு, நாட்டுத்தக்காளி, நாட்டுக் கொத்தமல்லி தழையை வறுத்து கல்லில் ஆட்டிய சாந்தில் தயாரிக்கப்படுகிறது.

தரமான வெள்ளாட்டுக் கறி மற்றும் இளமையான சுகுனா சிக்கன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் போன்றவை எமது சொந்தத் தயாரிப்புகளாகும்.

கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் நமது கறிஃபேக்டரிக்குச் சொந்தமான மரச்செக்கில் பிழிந்து எடுக்கப்படுகிறது.(1975 ஆம் ஆண்டிலேயே கதர்வாரிய மரச்செக்கு அமைத்த முன்னோடி விவசாயிகள்!)

கெட்டித் தயிருக்காக சுண்டக்காய்ச்சிய எருமைப்பால் பயன்படுத்தப்படுகிறது.

எளிமையான கட்டமைப்பு உயர்தரமான உணவுகள்

நல்ல காற்று, நல்ல வெளிச்சம், நல்ல தூய்மையான சூழல். நிம்மதியாக சாப்பிடலாம். வயிறு ஆற சாப்பிடும் இடம்.

பழைய காலத்து சுவை தரம் இவைகளை... மீட்டு எடுத்த உணவகம்

உண்மை வழியில் வியாபாரம் 8 ஆண்டுகளாக... வயிறு ஆற சாப்பிடும் இடம்.

கண்ணும் கருத்துமாய் கைப்பக்குவத்துடன்,

ஒரு நாளில் பலமுறை புத்தம்புதிதாய் சுடச்சுட தயாரிக்கப்படுகிறது.

இங்கு வருகைதந்து சாப்பிட்டுப் பார்த்து, திருப்தி அடைந்து

நண்பர்களிடம் சொல்லி வாடிக்கையாளர்களே வளர்த்தெடுத்த உணவகம்.

வயிற்றுக்கு கெடுதல் செய்யாத உணவுகள்

வயிறு ஆற சாப்பிடும் இடம். வேறு எங்கும் கிளைகள் இல்லை. உண்மை வழி வியாபாரம்.